Tuesday 7th of May 2024 03:03:33 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் மையத்தில் கடற்படை மாலுமிக்கு கொரோனா!

கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் மையத்தில் கடற்படை மாலுமிக்கு கொரோனா!


முல்லைத்தீவு கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த கடற்படை மாலுமி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (ஜூன்-1) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று இரண்டாவதாக கொரோனா தொற்றுக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட கடற்படையைச் சேர்ந்தவரே கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்த கடற்படை மாலுமி எனத் தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினரில் ஏற்கனவே இருபத்து இரண்டு பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இன்றும் ஒருவருக்கு தொற்று உறதி செய்யப்பட்டதையடுத்து தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE